10,12. ம் வகுப்பு மாணவர்கள் ஒழிங்கீனமான செயல்களில் ஈடுபடாதீர்கள்!!!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும்போது மாணவ–மாணவிகள் தேர்வின் போது ஒழுங்கீனத்தில் ஈடுபடாதீர்கள் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் தண்டனை உண்டு என்றும் ஹால் டிக்கெட்டில் முதன் முதலாக எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.தேர்வுகள்பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 4–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந்தேதி முடிவடைகிறது.



எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 15–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந்தேதி முடிவடைய உள்ளது.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 70 ஆயிரம் மாணவ–மாணவிகளும், பிளஸ்–2 தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் பேர்களும் எழுத உள்ளனர். தேர்வுக்கு உரிய பணிகள் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.புதிய முறைஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதியபின்னர் அவர்களின் விடைத்தாள்கள் எங்கு செல்கிறது என்று அவற்றை சிலர் பின் தொடர்ந்து சிபாரிசு செய்து மதிப்பெண் பெற முயற்சி செய்வது உண்டு.அப்படி யாரும் முயற்சி செய்யாத வகையில் புதிய முறையை அரசு தேர்வுகள் துறை கடந்த சில வருடங்களுக்குமுன்பாக அறிமுகப்படுத்தியது. அதன்படி தேர்வர்களின் விடைத்தாளின் முன்பக்கத்தில் கம்ப்யூட்டர் மூலம் ரகசிய கோடு கொடுக்கப்படுகிறது. தற்போது அந்த ரகசிய கோடு உடன் முன்பக்க தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஹால் டிக்கெட்முன்பக்கத்தாள் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். பின்னர் அங்கு உள்ள ஆசிரியர்கள் மூலம் காலியாக உள்ள விடைத்தாள் பக்கங்களுடன் முன் பக்கத்தாள் நூல் கொண்டு தைக்கப்படும்.இப்போதே தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.முதன் முதலாக தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரைகள் என்று கூறி மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:–

செல்போனுக்கு தடை
* மாணவர்கள் தேர்வு எழுத வரும்போது ஹால் டிக்கெட்டை அறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
* செல்போனோ அல்லது இதர தொலைதொடர்பு சாதனங்களோ தேர்வு வளாகத்திற்குள் அல்லது தேர்வு அறைக்குள் கட்டாயமாக கொண்டு வரக்கூடாது.
* விடைத்தாளில் எந்த காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாவையோ அல்லது வண்ணபென்சில்களையோ பயன்படுத்தக்கூடாது.
* விடைத்தாளின் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவோ அல்லதுதனியாக பிரித்து எடுக்கவோ கூடாது.ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை
* துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், துண்டுத்தாளை பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக்கொள்ளுதல், ஆள் மாறாட்டம் செய்தல் மற்றும் தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் போன்ற நிகழ்வுகள் ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படும்.எனவே மாணவர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...