உடலில், 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்தியிருந்தாலும், துணை ராணுவப் படைகளில் சேருவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், தீர்ப்பு அளித்துள்ளது.
துணை ராணுவத்தில் சேருவதற்கான தேர்வுகளை, எஸ்.எஸ்.சி., எனப்படும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்து கிறது. டில்லி போலீஸ், மத்திய ஆயுதப் படைகள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உள்ளிட்ட வற்றில் சேருவோர், உடலில் பச்சை குத்தியிருப்பதற்கு, எஸ்.எஸ்.சி.,யின் தேர்வு விதிகள் தடை விதிக்கவில்லை.
அதே நேரத்தில், 'உடலில் டாட்டூ எனப்படும் நிரந்தர பச்சை குத்தியிருப்பவர்கள், தகுதித் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க முடியாது' என, கடந்த, 2012ல், உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, பணியாளர் தேர்வு வாரியம், இந்த தடையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
துணை ராணுவத்தில் சேருவதற்கான தேர்வுகளை, எஸ்.எஸ்.சி., எனப்படும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்து கிறது. டில்லி போலீஸ், மத்திய ஆயுதப் படைகள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உள்ளிட்ட வற்றில் சேருவோர், உடலில் பச்சை குத்தியிருப்பதற்கு, எஸ்.எஸ்.சி.,யின் தேர்வு விதிகள் தடை விதிக்கவில்லை.
அதே நேரத்தில், 'உடலில் டாட்டூ எனப்படும் நிரந்தர பச்சை குத்தியிருப்பவர்கள், தகுதித் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க முடியாது' என, கடந்த, 2012ல், உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, பணியாளர் தேர்வு வாரியம், இந்த தடையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.