ரயில் பயணத்தில் சிக்கலா? : '182'க்கு போன் செய்யுங்க!

ரயில்வே பாதுகாப்பு படை புகார் எண், '182'ஐ, பயணிகளிடம் கொண்டு செல்லும் விழிப்புணர்வு பணி துவங்கி உள்ளது. ரயில் பயணத்தின் போது, பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க, ரயில்வே பாதுகாப்பு படையின் புகார் எண், 182 உள்ளது.
ரயிலில் நடக்கும் குற்றச் செயல்கள்; உடைமைகளை தவற விடுதல் தொடர்பாக, இந்த எண்ணை தொடர்பு கொண்டு, பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ரயில் பயணிகள் அனைவரும் இந்த எண் குறித்து அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. இது குறித்து, சென்னை கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் அஷரப் கூறியதாவது:

கடந்த மே மாதத்தில் மட்டுமே, 182 எண்ணுக்கு, 450 புகார்கள் வந்தன. இதில், பலரின் உடைமைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தோம். இந்த எண் தொடர்பான விழிப்புணர்வை பயணிகளிடம் கொண்டு செல்லும் பணியை ஜூலை, 15ம் தேதி வரை, முக்கிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...