மகாராஷ்டிர மாநிலத்தில் சுமை தூக்குவோர் பணிக்காக அரசு நடத்தும் தேர்வுக்கு 2,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 984 பேர் பட்டதாரிகள் ஆவர்.
கடைநிலை தொழிலாளர் பணிக்கு பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்திருப்பது, அரசுப் பணி மீதான மோகத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
காலியாக இருக்கும் 5 சுமைதூக்குவோர் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெறவுள்ளதாக மகாராஷ்டிர அரசுப் பணி தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் விளம்பரம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.
இந்தப் பணியில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அந்த 5 காலியிடங்களுக்கு 2,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் எம்ஃபில் முடித்தவர்கள் 5 பேர், முதுநிலை பட்டதாரிகள் 253 பேர் உள்பட 984 பேர் பட்டதாரிகள் ஆவர்.
மேலும் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் 605 பேரும், 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் 282 பேரும், அதற்கும் கீழான பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் 177 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கடைநிலை தொழிலாளர் பணிக்கு பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்திருப்பது, அரசுப் பணி மீதான மோகத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
காலியாக இருக்கும் 5 சுமைதூக்குவோர் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெறவுள்ளதாக மகாராஷ்டிர அரசுப் பணி தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் விளம்பரம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.
இந்தப் பணியில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அந்த 5 காலியிடங்களுக்கு 2,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் எம்ஃபில் முடித்தவர்கள் 5 பேர், முதுநிலை பட்டதாரிகள் 253 பேர் உள்பட 984 பேர் பட்டதாரிகள் ஆவர்.
மேலும் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் 605 பேரும், 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் 282 பேரும், அதற்கும் கீழான பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் 177 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.