பயோ மெட்ரிக் அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும்.!

தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்குவது, பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு அறிவிப்புகளை ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேசமயம், பயோ மெட்ரிக் வருகை முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்றுஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110 விதியின் கீழ் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நடப்பாண்டில் தமிழகத்தில் புதியதாக 5 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.  தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும்.நடப்பாண்டில் ரூ.60 கோடியே 79 லட்சம் செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வரின் இந்த அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளதுடன், நன்றியும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் கூறியதாவது: முதல்வர் அறிவிப்பில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர் வருகை பயோ மெட்ரிக் முறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஆசிரியர்களை குறிவைத்து செய்வதுபோல உள்ளது. இந்த முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணியல்லாமல் பல பணிகள் கொடுக்கப்படுவதால், பயோ மெட்ரிக் முறை பொருத்தமாக இருக்காது.மேலும், தமிழகத்தில் 355 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களிலும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும்உதவியாளர்கள் இல்லை. 1000 எழுத்தர் பணிகள் காலியாக உள்ளன.

இதனால் ஆசிரியர்கள் இலவச பொருட்களை எடுத்து செல்வது உள்ளிட்ட பல பணிகளை செய்கின்றனர். ஆதார் அட்டை தொடர்பான பணிகளையும், தேர்தல் ப ணிகளையும் செய்ய வேண்டியுள்ளதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆசிரியர் நலனில் அக்கறை கொண்ட அரசு, நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். 7வது ஊதியக் குழுவில் கூறப்பட்டதை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இவ்வாறு தாஸ் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...