இன்சுலின் ஊசிலியிலிருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு !

சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி மூலமாக வலியோடு சிகிச்சை எடுத்துக் கொள்வதில் இருந்து விடுதலை அளிக்கும் வகையில், இன்சுலின் மாத்திரைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்நாட்டின் நயாகரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும் வகையில் இன்சுலின் மாத்திரைகளை
தயாரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். தற்போது சோதனை முயற்சியில் உள்ள இந்த மாத்திரைகள், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், அப்போது இன்சுலின் ஊசிகளை பயன்படுத்தாமல், எளிதாக சர்க்கரை நோயை எதிர்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

‘குளோஸ்டோசோம்’ எனப்படும் லிபிட் அடிப்படையிலான புரதத்தை கொண்டு, இந்த மாத்திரைகளைத் தயாரித்துள்ளனர். இதனை வாய் வழியாக விழுங்கினால், ரத்தத்தில் கலந்து தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யும் என்றும், இதன்மூலமாக சர்க்கரை கட்டுக்குள் வரும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வலி மிகுந்த இன்சுலின் ஊசி சிகிச்சையில் இருந்து சர்க்கரை நோயாளிகள் விடுபடும் நாள் தொலைவில் இல்லை எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2006-ஆம் ஆண்டு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுவாச வழி இன்சுலின் மருந்து, சந்தையில் பெரும் சரிவைக் கண்டது. இந்த முறை, மாத்திரைகளின் மூலமாக இன்சுலினை சர்க்கரை நோயாளிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருக்கிறது அமெரிக்கா.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...