வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை - மக்களின் நிலை?

நாட்டில் இன்னும் போதிய பணப்புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதால், மக்கள் இன்னும் சிரமத்தை அனுபவிக்க நேரிடும்.



மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பையடுத்து, மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு வங்கிகளில் காத்து கிடக்கின்றனர். மேலும், செலவுக்காக பணம் எடுப்பதற்கு ஏடிஎம்களில் கால் கடுக்க நிற்கின்றனர். மேலும், வங்கிகளில் போதிய பணம் விநியோகிக்கப்படாததால், வங்கிகளும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. மேலும், ஒரு வாரத்திற்கு ஒரு நபர் வங்கியிலிருந்து குறைந்தபட்சமாக 24,000 வரை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பணத்தட்டுபாட்டால் அதையும் செயல்படுத்த முடியாமல் வங்கி ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வங்கிகளுக்கு வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. திங்கட்கிழமை மிலாடி நபி வருவதால் தொடர்ந்து வங்கிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இன்று வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், வங்கியிலோ போதிய பணம் இல்லை. இது குறித்து வேப்பேரி கனரா வங்கி கிளை மேலாளர் கணேஷ் கூறுகையில், “நான் பணிபுரிந்து வருகிற வங்கியில் இன்று ரூ.15 லட்சம் கொடுக்கப்பட்டது. அதனால், நபருக்கு ரூ.10,000 என்ற விகிதத்தில் பணம் விநியோகிக்கப்பட்டது. மருத்துவச் செலவு, கல்லூரி, பள்ளி கட்டணம் என தேவைகளை முன்வைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு எங்களால் முடிந்தளவுக்கு உதவ முயல்கிறோம்’’ என்று கூறினார்.

மக்கள் புதிய நோட்டுகளை பெற முடியாமல் தவித்து வரும் வேளையில், இன்று சென்னையைச் சேர்ந்த சேகர் ரெட்டி என்னும் தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக புதிய ரூபாய் 2000 நோட்டுகள் வருமான வரி சோதனையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...