ஜெ., மருத்துவ செலவு எவ்வளவு??

கிட்டதட்ட இரண்டரை மாதங்கள் வரை, முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரபல மருத்துவர் ஜான் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ்

மருத்துவமனை டாக்டர்கள் இணைந்து, அவருக்கு மருத்துவம் பார்த்தனர். ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார்.

இந்த இரண்டரை மாதங்களுக்கும் அப்பல்லோ நிர்வாகத்தின் மூலம் அரசுத் தரப்பில் செலவான தொகையை அறிய, பலரும் பலவிதங்களிலும் முயன்று வருகின்றனர். தகவல் பெறும் உரிமை மூலமும் பலர் முயன்று வருகின்றனர்.


எவ்வளவு:


இந்நிலையில், இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது;
முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் அனைத்தையும், அரசே ஏற்றுக் கொள்ள விதிகளில் வாய்ப்புள்ளது. அந்த அடிப்படையில்தான், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறன், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட பலருக்கும், அரசுத் தரப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஜெயலலிதாவுக்கு, ஆறு கோடி ரூபாய் வரை, மருத்துவத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையை, அரசுத் தரப்பில் செலவழித்துள்ளனர்.

நிதித் துறையிலிருந்து, ஒரு அரசு உத்தரவின் மூலமாக, எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்க வாய்ப்புள்ள போது, சுகாதாரத் துறையில் இருந்து பணத்தை எடுத்து ஏன் செலவிட்டிருக்க வேண்டும் என தெரியவில்லை. நாளையே, இந்த விஷயம் ஆடிட்டிங்கின் போது, விமர்சனத்துக்கு ஆளாகலாம்.இவ்வாறு, அவ்வட்டாரங்கள் கூறின.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...