தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம் !

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகின்றது.
விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி தொடர்ந்து 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
நாளை நடைபெறும் கலந்தாய்வில் 175-135 வரையுள்ள கட்ஆப் மதிப்பெண் உள்ளவர்களுக்கும், நாளை மறுநாள் 129-82 கட்ஆப் மதிப்பெண் உள்ளவர்கள் என மொத்தம் 2,300 பேர் கலந்தாய்வுக்கு அழைக்க உள்ளனர்.
கலந்தாய்வு குறித்து கூடுதல் தகவல்கள் அறிய https://www.annauniv.edu/tnea2016/schedule.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.