வருடத்தின் முதல் பள்ளி வேலைநாளான இன்று பள்ளியில் நுழைந்த அடுத்த வினாடி என்னை நெகிழவைத்த என் மாணவனின் ஒரு செயல்-Mrs.Maha Lakshmi

என் மாணவன் என்னிடம் வந்து உரையாடல் :
வேலு :மிஸ் எனக்கு இப்போ school க்கு வரும்போது 100ரூபாய் கீழக்கெடச்சது
நான் :என்னடா பண்ண? கம்சலா(அவன் அம்மா)கிட்ட கொடுத்துட்டியா?
வேலு :No miss
நான்:பின்ன?
வேலு:ரூபாயை எடுத்துட்டு வந்த வழியே போனேன்

மிஸ்.விக்னேஷ்(ரூபாய்க்கு சொந்தக்காரன்)எதிர்ல வந்தான் மிஸ்.அவன் கையில Ration card. இருந்துச்சு.அவனும் எதையோ தொலைச்சிட்டுத் தேடற மாதிரி இருந்துச்சு.என்னடா விக்கி தேடறனு கேட்டேன்.100 ரூபாய் ration card வச்சி எடுத்துக்கிட்டு society. க்குப் போனேன்டா.எங்கே விழுந்துட்டு இருக்குனு அவன் சொன்னான் மிஸ்.நான் அவன்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன் மிஸ்.
நான்:(ஆச்சரியம்கலந்த சந்தோஷத்துடன்)Very good da chellam னு சொல்லிட்டு அவன் கன்னத்தைக்கிள்ளி ஒரு முத்தம் கொடுத்தேன்.
நாம் கற்பித்த நன்னெறிகள் மாணவர்களின் செயல்வழியே வெளிப்படும்போதுதான் அந்தக்கற்பித்தல் செயலுக்கே வலிமைக் கூடுகிறது.
இவனுக்குத் தந்தை என்ற உறவும் தாய் என்ற உறவும் தாயின் உருவே.
5-ம் வகுப்பு மாணவன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...