சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, அமைச்சரவை செயலாளர், அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில் அலுவலர்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சுதந்திர தினத்தன்று, விழா நடக்கும் பகுதிகளில் இயங்கும் மெட்ரோ ரயில் பயணம் இலவசமாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.