SSTA இடைநிலை ஆசிரியர் வழக்கு நீதிமன்ற ஆணையுடன் முதலமைச்சர் தனிபிரிவில் மனு கொடுக்க தீர்மானம் !!


வரும் வாரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்  நீதிமன்ற அசல் ஆணை கிடைத்தவுடன் SSTA மாநில அமைப்பின் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள உண்மையான எண்ணிக்கை மற்றும் தற்போது ஊதியம் வழங்கினால் ஆகும் ௯டுதல் செலவு பட்டியலில் ,நாம்
அனைவரும் +12 ம் வகுப்பு முடித்து தான் பணிபுரிகிறோம் என்ற விளக்கம் (ஆதாரம் ),தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களில் சுமார்  75% பேர் கிராம புறத்தில் தான்
பணிபுரிகின்றனர் என்ற விபரங்களுடன் இடைநிலை ஆசிரியர்களில் 15% பேர் நகர்புறங்களில் பணிபுரிந்தாலும் அவர்களுக்கும் மத்திய அரசு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற விபரங்கள்களுடன் , முதலமைச்சர் தனிப்பிரிவு ,நிதி துறை செயலாளர் ,(செலவீனம் ) ,மற்றும் நிதித்துறை அமைச்சர் ,கல்வித்துறை செயலாளர் ,கல்வித்துறை அமைச்சர் ,தொடக்ககல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து நமக்கு வழங்கவேண்டிய நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் . எப்பாடு பட்டாகிலும் இழந்த ஊதியத்தை பெற்று தரும் வரை ஓயாது SSTA .  எங்கும் வெற்றி எதிலும் வெற்றி !!!        எண்ணிய யாவினும் வெற்றி!!!    ....இப்போராட்டம் எங்கள் போராட்டம் அல்ல !!!                         உங்கள் போராட்டம் !!!                   வேடிக்கை பார்த்து பார்த்து வீணாய் போனது தான் மிச்சம் இப்படியே போனால் 7 வது ஊதியக்குழுவில் நமக்கு மிஞ்சுவது எச்சம் மட்டுமே.                 இன்று விட்டோம் !!!                             என்றும் பெற முடியாது !!!    நண்பரே கரம் கொடுங்கள்!!!                         கண்ணீர் துடைக்கும் SSTA .            என்றும் உங்கள் ஆதரவுடன் ஆசிரியர்களுக்கான SSTA .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...