பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 31ம் தேதி நிறைவுபெற்றது. இதையடுத்து
விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மொழிப்பாடங்களுக்கான
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்தது. பிற
பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது
50 முதல் 65 சதவீத விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விட்டன. முக்கிய
பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே
முதல் வாரத்தில் ரிசல்ட் வெளியிட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 16ம்
தேதிக்குள் விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுமையாக நிறைவடையும் என கல்வி
அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 20ம் தேதி முதல் 10ம்
வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. 40 ஆயிரம்
ஆசிரியர்கள் இப்பணியை செய்ய உள்ளனர். இம்மாத இறுதிக்குள் 10ம் வகுப்பு
விடைத்தாள்களையும் திருத்தி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.