பெட்ரோல், டீசலுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான விலை நிர்ணயிக்க வேண்டும் என, பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூட்டமைப்பான – ஏ..ஐ.பி.டி.ஏ., தெரிவித்துள்ளது.
இதன் தலைவர், அஜய் பன்சால் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.
இதற்கு, ‘வாட்’ வரி தான் காரணம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 60 பைசா முதல், 4 ரூபாய் வரையும், டீசலுக்கு, 1 ரூபாய் முதல், 7.50 ரூபாய் வரையும் வித்தியாசம் உள்ளது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், மிக அதிகமாக, 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கோவாவில், வரி குறைவாக உள்ளது.
டீசலுக்கு ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்கள், 20 – 24 சதவீத வரி விதிக்கின்றன. இது, அரியானாவில் குறைவாக உள்ளது. இதனால், மாநில எல்லையோர பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுகின்றன. இதை தவிர்க்க, நாடு முழுவதும், பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலை தேவை. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில், இதற்கு தீர்வு கிடைக்கும். ஆனால் அதில், பெட்ரோல் மற்றும் டீசலை சேர்க்க, மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பெட்ரோலிய டீலர் கூட்டமைப்பின் தலைவர் முரளி: தமிழகத்துடன் ஒப்பிடும் போது, புதுச்சேரியில், 1 லிட்டர் பெட்ரோல் விலை, ஐந்து ரூபாய்; டீசல் விலை, இரண்டு ரூபாய் குறைவாக உள்ளது. வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள், விலை குறைவாக உள்ள மாநிலங்களில், பெட்ரோல், டீசல் போடுவர். இதனால், விலை அதிகம் உள்ள மாநிலங்களில், பெட்ரோல், டீசல் விற்பனை பாதிக்கும்; அரசுக்கும் வரி வருவாய் இழப்பு ஏற்படும். நாடு முழுவதும், ஒரே சீரான விலை இருந்தால், இந்த பாதிப்பு இருக்காது
தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்க முன்னாள் தலைவர் தங்கராஜ்: வட மாநிலங்களில், பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைவாக உள்ளதால், அவற்றை பயன்படுத்தும், பிளாஸ்டிக், ரசாயன தொழிற்சாலைகளின் தயாரிப்புகள், குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், தமிழகத்தில், பெட்ரோலியப் பொருட்கள் விலை அதிகமாக உள்ளதால், அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை சீரமைக்கப்பட்டால், இந்த பிரச்னை எழாது.
கவுரி ராமச்சந்திரன், பொருளாதார நிபுணர்: மாநில அரசுகள், மதிப்பு கூட்டு வரி விதிப்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும், பெட்ரோல், டீசல் விலை மாறுபடுகிறது. எனவே, அவற்றின் விலை, நாடு முழுவதும் ஒரே மாதிரி இருந்தால், அனைவரும் பயன் பெறுவர்.
இதன் தலைவர், அஜய் பன்சால் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.
இதற்கு, ‘வாட்’ வரி தான் காரணம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 60 பைசா முதல், 4 ரூபாய் வரையும், டீசலுக்கு, 1 ரூபாய் முதல், 7.50 ரூபாய் வரையும் வித்தியாசம் உள்ளது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், மிக அதிகமாக, 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கோவாவில், வரி குறைவாக உள்ளது.
டீசலுக்கு ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்கள், 20 – 24 சதவீத வரி விதிக்கின்றன. இது, அரியானாவில் குறைவாக உள்ளது. இதனால், மாநில எல்லையோர பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுகின்றன. இதை தவிர்க்க, நாடு முழுவதும், பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலை தேவை. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில், இதற்கு தீர்வு கிடைக்கும். ஆனால் அதில், பெட்ரோல் மற்றும் டீசலை சேர்க்க, மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பெட்ரோலிய டீலர் கூட்டமைப்பின் தலைவர் முரளி: தமிழகத்துடன் ஒப்பிடும் போது, புதுச்சேரியில், 1 லிட்டர் பெட்ரோல் விலை, ஐந்து ரூபாய்; டீசல் விலை, இரண்டு ரூபாய் குறைவாக உள்ளது. வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள், விலை குறைவாக உள்ள மாநிலங்களில், பெட்ரோல், டீசல் போடுவர். இதனால், விலை அதிகம் உள்ள மாநிலங்களில், பெட்ரோல், டீசல் விற்பனை பாதிக்கும்; அரசுக்கும் வரி வருவாய் இழப்பு ஏற்படும். நாடு முழுவதும், ஒரே சீரான விலை இருந்தால், இந்த பாதிப்பு இருக்காது
தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்க முன்னாள் தலைவர் தங்கராஜ்: வட மாநிலங்களில், பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைவாக உள்ளதால், அவற்றை பயன்படுத்தும், பிளாஸ்டிக், ரசாயன தொழிற்சாலைகளின் தயாரிப்புகள், குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், தமிழகத்தில், பெட்ரோலியப் பொருட்கள் விலை அதிகமாக உள்ளதால், அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை சீரமைக்கப்பட்டால், இந்த பிரச்னை எழாது.
கவுரி ராமச்சந்திரன், பொருளாதார நிபுணர்: மாநில அரசுகள், மதிப்பு கூட்டு வரி விதிப்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும், பெட்ரோல், டீசல் விலை மாறுபடுகிறது. எனவே, அவற்றின் விலை, நாடு முழுவதும் ஒரே மாதிரி இருந்தால், அனைவரும் பயன் பெறுவர்.