இணையதளம் மூலமான பரிவர்த்தனையில் உஷார் : கணக்கு விவரங்கள் திருடுபோக விடாதீர்கள்

இன்றைய காலகட்டத்தில் மொபைல் பேங்கிங் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. விரல் நுனியில் அனைத்தையும் பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வங்கி கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போன்ற பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இவை அனைத்தும் மொபைல் பேங்கிங் வழியாக செய்ய முடியும். அதிலும், ஸ்மார்ட் போன்
வரவுக்கு பிறகு மொபைல் பேங்கிங் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் உலகின் 2வது நாடாக இந்தியா திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஏற்ப வங்கிகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் இயங்குதளத்துக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளன. இவை பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.
 வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன் டைம் பாஸ்வேர்டை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் வழங்குகின்றன. இது தவிர இன்டர்நெட் பேங்கிங்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு ரகசியங்களை திருடும் வைரஸ்களை பலர் உருவாக்கி வருகின்றனர். எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் கையாள வேண்டியுள்ளது.

பாதுகாப்பாக மொபைல் பேங்கிங் செய்ய சில குறிப்புகள்:

 உங்கள் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைக்கவும். செல்போனில் எஸ்.எம்.எஸ். அலர்ட் வருமாறு பதிவு செய்யவும். செல்போனை வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன செல்போன்களை வைரஸ்கள் பாதிக்கக்கூடிய ஆபத்து அதிகம். உங்கள் செல்போனில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும். இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். (உதராணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை). டெபிட் / கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை செல்போனில் பதிவு செய்ய வேண்டாம். உங்களது செல்போன் தொலைந்து போனால் மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள். மொபைல் பேங்கிக்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றுங்கள்.

வெளிப்படையான பாஸ்வேர்டுகளை (பிறப்பு பெயர், தேதி) பயன்படுத்த வேண்டாம். மொபைல் பேங்கிங்கின் போது பாதுகாப்பற்ற வை ஃபை இணைப்பை பயன்படுத்த வேண்டாம். ப்ளூடூத்துடன் கூடிய சேவைகளை துண்டியுங்கள். எனினும், மேற்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும்.

ஏடிஎம் இலவச பரிவர்த்தனை குறைக்கப்பட்ட நிலையில் ஏடிஎம் கார்டுகள் மூலம் ஆன்லைனில் 3டி செக்யூர்டு பாஸ்வேர்டு அல்லது ஏடிஎம் பின் மூலம் பேமன்ட் வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தனது தனிப்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலமே பரிவர்த்தனை செய்வது, வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் நிறுவி தகவல்களை பாதுகாப்பது, வங்கிகள் வழங்கும் விர்சுவல் கீபேர்டு மூலம் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை நிரப்புவது முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும்.எந்த ஒரு வங்கியும் வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு எண், சிவிவி எண், பாஸ்வேர்டு விவரங்களை கேட்பதில்லை. இதுகுறித்து எச்சரிக்கை குறுந்தகவல்களை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வங்கிகள் அனுப்பி வருகின்றன. எனவே இதில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...