அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்தால் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, பெரும் புத்திசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவனாகவும், செல்வந்தர்களாகவும் வளர்வதாக பிரேசிலில் சுமார் 30 ஆண்டுகலாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தையாக இருந்தபோது சுமார் 1 வருடம் தாய்ப்பால் குடித்த குழந்தையின் அறிவுத்திறன்
குறிப்பதற்கான குறியீட்டுமுறையின் கீழ் அவர் புத்திசாலியாக இருப்பது தெரியவந்துள்ளதாக The Lancet Global Health என்ற மருத்துவ அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதாவது, ஒருமாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, சுமார் ஒரு வருட காலம் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் அறிவுத்திறன் சராசரியாக நான்கு மடங்கு அதிகமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒருவித கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு அந்த அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களும் குழந்தைகளுக்கு நீண்டநாட்கள் கிடைக்கும்போது அந்த குழந்தைகளின் மூளை சீராக வளர்ந்து அவர்களின் புத்திக்கூர்மை மேம்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தாய்ப்பால் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளைவிட இந்த ஆய்வின் முடிவுகள் மேம்பட்டவை என்று இதை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 1980களில் பிரேசிலின் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டபோது அதிக அளவிலான குழந்தைகள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால், முந்தைய ஆய்வுகளைவிட தற்போதைய ஆய்வு மேம்பட்டுள்ளதாக ஆய்வு மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக சுமார் 3500 குழந்தைகளின் 30 ஆண்டுகால வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பதற்கான குறியீட்டுமுறையின் கீழ் அவர் புத்திசாலியாக இருப்பது தெரியவந்துள்ளதாக The Lancet Global Health என்ற மருத்துவ அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதாவது, ஒருமாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, சுமார் ஒரு வருட காலம் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் அறிவுத்திறன் சராசரியாக நான்கு மடங்கு அதிகமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒருவித கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு அந்த அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களும் குழந்தைகளுக்கு நீண்டநாட்கள் கிடைக்கும்போது அந்த குழந்தைகளின் மூளை சீராக வளர்ந்து அவர்களின் புத்திக்கூர்மை மேம்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தாய்ப்பால் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளைவிட இந்த ஆய்வின் முடிவுகள் மேம்பட்டவை என்று இதை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 1980களில் பிரேசிலின் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டபோது அதிக அளவிலான குழந்தைகள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால், முந்தைய ஆய்வுகளைவிட தற்போதைய ஆய்வு மேம்பட்டுள்ளதாக ஆய்வு மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக சுமார் 3500 குழந்தைகளின் 30 ஆண்டுகால வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.