பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட ஆதார் எண்ணை பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது !!

இது தொடர்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மதிய உணவை தயார் செய்யும் சமையல்காரர்

மற்றும் அவரது உதவியாளரும் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்._

_ஜம்மு காஷ்மீர், அசாம், மேகலாயா மாநிலங்களுக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவினால், மதிய உணவு திட்டம் இன்னும் வெளிப்படை தன்மை மிக்கதாகவும், சிறப்பானதாகவும் மாறும். அனைத்து மாநிலங்களுக்கும் இது பற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...