நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை !

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகரும்போது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


2005-ம் ஆண்டு கொட்டித்தீர்த்தமழை

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக பெய்யவேண்டிய மழை அளவு 44 செ.மீ. ஆனால் இந்த வருடம் இதுவரை தமிழ்நாட்டில் பெய்த மழை அளவு 48 செ.மீ.,

சென்னையில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 79 செ.மீ. ஆனால் இந்த வருடம் இதுவரை பெய்த மழைஅளவு 114 செ.மீ.

கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 77 செ.மீ.மழை பெய்துள்ளது. இது சராசரி மழையைவிட 79 சதவீதம் அதிகம். அதாவது மழை கொட்டித்தீர்த்துள்ளது. 1918-ம்ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் 109 செ.மீ.மழையும், 1985-ம்ஆண்டு மீனம்பாக்கத்தில் 107 செ.மீ.மழையும் அதிக பட்சமாக பெய்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

இப்போது தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இது பற்றி சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்.

நாளை முதல் அதிகரிக்கும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வரும்போது தமிழ்நாட்டில் மழையின் அளவு அதிகரிக்கும். அதாவது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமைகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...