அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 20 கடைசி நாள்...

அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள் நடத்தப்படுகின்றன. இதில், பல பொறியியல் சார்ந்த, பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை
அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.



எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர், இதில் சேர முடியும். இதற்கு, இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ஜூன் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 'மாவட்டம் வாரியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...