சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த, 48 மணி நேரத்தில், வங்கக்
கடலின் மத்தியப் பகுதியில், காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால், வட மற்றும் தென் மாவட்டங்களில், நாளை முதல், இரு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கடலின் மத்தியப் பகுதியில், காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால், வட மற்றும் தென் மாவட்டங்களில், நாளை முதல், இரு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.