புதிய கண்டுபிடிப்புகள் அடிப்படையில், ஊதிய உயர்வை முடிவு செய்யலாம் !

 கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையில் மட்டும், ஊதிய உயர்வை வழங்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.


           கல்லுாரி மற்றும் பல்கலைகளின் பேராசிரியர்களில், அனுபவம் பெற்றவர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், அதிகபட்சம், 1.15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். அதே நேரம், கவுரவ விரிவுரையாளர்கள், 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர்.
இந்நிலையில், கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களின் ஊதியம் தொடர்பான முடிவு எடுக்க, யு.ஜி.சி., தனிக்குழுவை அமைத்துள்ளது. இந்த குழு பல பரிந்துரைகளை வழங்கிஉள்ளது. அதன்படி, பேராசிரியர்களின் கல்வித்தகுதி, கற்பித்தல் திறன், ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, புதிய கண்டுபிடிப்புகள் அடிப்படையில், ஊதிய உயர்வை முடிவு செய்யலாம் என, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.இதுகுறித்த விதிகளை, யு.ஜி.சி., இணையத்தில் மத்திய அரசு
வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து, செப்., 30க்குள் கருத்து தெரிவிக்கும்படி, பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களை, யு.ஜி.சி., கோரியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...