பல்கலை ஊழியர் பதவி உயர்வும் இழுபறி : செயலருக்கு குவியும் புகார் !

மதுரை காமராஜ் பல்கலை ஊழியர்கள் பட்டியல் தயாராக இருந்தும், பதவி உயர்வு அளிப்பதில் ஒரு ஆண்டுக்கும் மேல் இழுபறி நிலவுகிறது. இப்பல்கலையின் பல்வேறு பிரிவுகளில் உதவியாளர், கண்காணிப்பாளர், சீனியர் கண்காணிப்பாளர், உதவிப்
பதிவாளர், துணைப் பதிவாளர் பதவி உயர்வு பட்டியல் தயார் நிலையில் உள்ளது; ஆனால், துணைவேந்தர் இல்லாததால் பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



குவியும் புகார்கள் : பதவி உயர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு புகார்களை கன்வீனர் கமிட்டி தலைவரான உயர்கல்வி செயலர் கார்த்திக்கு, ஊழியர்கள் அனுப்பி வருகின்றனர். பதவி உயர்வு பட்டியலில் விதிமீறல் நடந்துள்ளதாக புகார் சென்றதால், செயலரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. புதிய துணைவேந்தர் நியமனம் போல, ஊழியர் பதவி உயர்வும் இழுபறியில் சிக்கியுள்ளது.



இதுகுறித்து பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பதவி உயர்வு பட்டியலில் உள்ள சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனாலும் தாமதம் ஏற்படுகிறது. விதிமீறி சிலருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதால் சிக்கல் நீடிக்கிறது. துணைவேந்தர் நியமிக்கப்பட்டால் தான், இதற்கு தீர்வு கிடைக்கும்' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...