ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதன் முதலாக நாளை காலை 11.30 க்கு தமிழக அமைச்சரவை அவசரமாக கூடுகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்தார். இதனையடுத்து முதல்வராக ஓ.பி.எஸ்., பதவியேற்றார். இந்நிலையில், நாளை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை
கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும் காவிரி மற்றும் வருங்கால அரசின் நிர்வாக செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்தார். இதனையடுத்து முதல்வராக ஓ.பி.எஸ்., பதவியேற்றார். இந்நிலையில், நாளை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை
கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும் காவிரி மற்றும் வருங்கால அரசின் நிர்வாக செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.