75 நாட்கள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு காலமானார். இந்நிலையில் இன்று அப்பல்லோவுக்கு தொலைபேசியில் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அடிக்கடி வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளான அப்பல்லோ இதுபற்றி அளித்த புகாரின் பேரில் ஒரு வாட்ச்மேன் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அப்பல்லோ நிர்வாகம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் பற்றி காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அடிக்கடி வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளான அப்பல்லோ இதுபற்றி அளித்த புகாரின் பேரில் ஒரு வாட்ச்மேன் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அப்பல்லோ நிர்வாகம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் பற்றி காவல்துறை விசாரணை செய்து வருகிறது.