டிஎன்பிஎஸ்சி குரூப்,4 தேர்வுக்கான முடிவுகள் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு.

ஈரோட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (டிஎன்பிஎஸ்சி.,) ஆர்.நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள 38 பதவிகளுக்கான குரூப்,3 தேர்வில் மாநிலம் முழுவதும் 9 மையங்களில் 26 ஆயிரம் பேர் தேர்வெழுதுகின்றனர். கோவை மையத்தில் மட்டும் 4500 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். அடுத்த
வாரம் நடைபெற உள்ள குரூப்,2 தேர்வில் 3,600 பணியிடங்களுக்கு 114 மையங்களில் 6.80 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்,4 தேர்வுக்கான முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும். இவை தவிர 16 பதவிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில் முக்கியமாக 454 வேளாண் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அடுத்த 6 மாதங்களில் சுமார் 14 ஆயிரம் பணிரூ.டங்கள் நிரப்பப்படும். செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ள கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் பங்கேற்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் 10 லட்சம் பேர் இத்தேர்விற்காக விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு துறையிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பெறுவதற்கு முன்பு ஒவ்வொரு துறையிடம் இருந்தும் ஒரு பட்டியல் கோரப்படுகிறது. இன்னும் 5 மாதத்திற்குள் மேலும் 15 ஆரூ.ரம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...