ஆசிரியர்
தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முக்கிய விடைகள் தொடர்பாக ஆட்சேபம்
தெரிவித்து ஏராளமானோர் மனுக்களை
அளித்தனர். அந்த மனுக்கள்
அந்தந்த பாட
நிபுணர்களை வைத்து ஆராயப்பட்டது.
மாற்றம் இருக்கும்
.
பெறப்பட்ட ஆட்சேப மனுக்கள் திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட உள்ளன.
இரண்டு
தாள்களுக்கும் முக்கிய விடைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு,
விடைத்தாள்கள்
மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு, அரசுடன் ஆலோசித்து
வரும் வார
இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஆசிரியர்
தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தகுதி
மதிப்பெண் குறைப்பு? ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி
பெறாத
சூழல் எழுந்தால், சில பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணை குறைப்பது
குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. மாநிலம்
முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும் எழுதினர்.