பிளஸ் 2 தனித்தேர்வு "தட்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்


(www.dge.tn.nic.in) பிளஸ் 2 தனித்தேர்வர்கள் "தட்கல்' திட்டத்தின் கீழ் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  அக்டோபர் மாதம்
நடைபெறவுள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) இணையதளத்தில் (www.dge.tn.nic.in) விண்ணப்பிக்கலாம்.  செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். செப்டம்பர் 22-ம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு விண்ணப்பிக்க முடியாது. "தட்கல்' முறையில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், ரூ. 1,000 கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.  பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து அனுமதிச் சீட்டை பெறலாம். இதில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ் அனுப்புவதற்கு ரூ. 30-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையைச் சமர்ப்பிக்கவேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...