மாற்றம் -தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:-

  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஹனிஷ் சாப்ரா, வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட கலெக்டர் அஜய்யாதவ் நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும், நாமக்கல் கலெக்டர் ஜே.குமரகுருபரன், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனராகவும், அரியலூர் கலெக்டர் அனு ஜார்ஜ், பொதுத்துறை (புரோட்டோகால்) இணை செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
   வேளாண்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றிய எல்.சித்திரசேனன் காஞ்சிபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பி.சங்கர் வேலூர் மாவட்ட கலெக்டராகவும், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த டி.ஜெகநாதன் நாமக்கல் மாவட்ட கலெக்டராகவும், பொதுத்துறை துணை செயலாளராக பணியாற்றிய பி.செந்தில்குமார் அரியலூர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...