பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் அக்டோபர் 11 முதல் 13
வரை விநியோகிக்கப்படும் என்று
அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி
அறிவித்துள்ளார்.பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அக்டோபர் 15 முதல் 26 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேர்வர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஹால் டிக்கெட் விநியோக மையங்கள் தொடர்பாக அந்தந்த மண்டல துணை இயக்குநர்கள் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம்.