அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்த்திட பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாணவர்களை பகிர்ந்து அளிக்க கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்த்திட பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் ஓவ்வொருவருக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் பகிர்ந்து ஒதுக்கீடு செய்தும், முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களை பகிர்ந்து ஒதுக்கீடு செய்தும், அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களின் கல்வித்திறன், வருகை, தனித்திறன் போன்ற ஒவ்வொரு செயல்பாடுகளையும் மேற்பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவர்கள் கூட்டத்தில் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.