ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் 1,389 சிறப்பாசிரியர்கள் நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் உள்பட 1,389 சிறப்பாசிரியர்கள் சனிக்கிழமை பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற இதற்கான ஆன்-லைன் கலந்தாய்வில் 1,453 பேர் பங்கேற்றனர். அவர்களில் 292 பேருக்கு ஓவிய
ஆசிரியர்களாக 292 பேர், தையல் ஆசிரியர்களாக 82 பேர், இசை ஆசிரியர்களாக 40 பேர், உடற்கல்வி ஆசிரியர்களாக 975 பேர் என மொத்தம் 1,389 பேர் பணி நியமனம் பெற்றனர்.
ஆன்-லைன் மூலம் வெளிப்படையாக கலந்தாய்வு நடைபெற்றதாகவும், 2 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்களில் இருந்து இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்ததாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...