தனியார் பள்ளி வாகனங்கள் நவம்பர் 19ம் தேதி
இயக்கப்படாது என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. கிருஷ்ணகிரியில் இன்று
நடைபெற்ற தனியார் பள்ளிகள் சங்க கூட்டத்தில் தமிழக அரசின்
கட்டுப்பாட்டுக்கு எதிராக பல்வேறு
முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில்
பள்ளி வாகனங்களுக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி
வேலைநிறுத்தம் செய்யப் போவதாக முடிவ செய்யப்பட்டுள்ளது. டிரைவர் விபத்து
ஏற்படுத்தினால் பள்ளி தாளாளரை கைது செய்யும் விதிக்கும், டிரைவருக்கு
வாகனத்தில் தனி அறை அமைப்பது உள்ளிட்ட விதிகளுக்கும் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளது.