தகுதி இருந்தும், 25 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல், 400 மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஏங்கி வருகின்றனர்.
மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் அறிவியல், வணிகவியல் பாடம் நடத்தும் இவர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆட்சியில் பலமுறை போராடியும், பதவி உயர்வு கிடைக்கவில்லை.தொழிற்கல்வி ஆசிரியர்
சங்க மாநில செயல் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: தலைமை மற்றும், முதுகலை ஆசிரியர்களாகவோ பதவி உயர்வு கோரி வழக்கு தொடர்ந்தோம். கோர்ட் தீர்ப்பளித்தும், அரசு நடவடிக்கை இல்லை. மீண்டும் கோர்ட்டை நாடுவோம். கோரிக்கையை வலியுறுத்தி, மாநில அளவில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.