தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தாம்பரம் மண்டல அலுவலகத்தில்
கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஊழலுக்கு
எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த 29ம் தேதியிலிருந்து 3ம் தேதி
வரை
நடந்தது. தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன வாடிக்கையாளர்கள்
தங்களது நீண்ட நாள் குறைகள், தீர்க்கப்படாத குறைகள் குறித்து 044-22262002
என்ற எண்ணில் தாம்பரம் மண்டல ஆணையர் மதியழகனை தொடர்பு கொண்டு
தெரிவிக்கலாம். தாம்பரம் மண்டல அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.