கடல்பகுதியில் காற்றாலை அமைக்க முடியுமா? காற்றின் வேகத்தை கணக்கிட தனுஷ்கோடியில் அதிநவீன கருவி


மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடல்பகுதியில் காற்றாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசு திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் காற்றின் வேகத்தை கணக்கிட தனுஷ்கோடியில் 100 மீட்டர் உயரத்தில் அதிநவீன கருவி 6 மாதத்தில்
அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் 7,000 கி.மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பரப்பளவு உள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் காற்றாலைகளை அமைக்க முடியும். ஆனால், எங்கெல்லாம் காற்றாலை அமைக்க முடியும் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். காற்றின் வேக அளவு, எந்த திசையில் இறக்கைகள் அமைக்கலாம் போன்ற பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் தனுஷ்கோடியில் 100 மீட்டர் உயரத்தில் அதிநவீன கருவி அமைக்கப்பட உள்ளது. 6 மாதத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக காற்றாலை வல்லுநர் கிரி கூறியதாவது: பருவ நிலைக்கான தேசிய திட்டத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த மின்உற்பத்தியில் 20 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இடம்பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையை அடைய ஆண்டுதோறும் 8,000 மெகா வாட் அளவு மின்உற்பத்தி பெறும் வகையில் மின்நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அதாவது, பயோ கியாஸ், சூரிய ஒளி, காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டும். இதை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் புதுப்பிக்கதக்க எரிசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய களமிறங்கியுள்ளன. கடலோர பகுதிகளில் காற்றாலை அமைப்பது நல்ல திட்டம் தான். ஆண்டு முழுவதும் மின்உற்பத்தி செய்ய முடியும். ஆனால், எல்லா இடத்திலும் அதற்கான வாய்ப்பு இருக்காது. அதற்கு ஏற்ற பகுதிகளை கண்டறிய வேண்டும். காற்றின் வேகத்தை கணக்கிட வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் தனுஷ்கோடியில் அதிநவீன கருவி பொருத்தப்பட்டு ஆய்வு நடத்தவுள்ளது. ஒரு இடம் மட்டுமே போதாது, இதுபோல், பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த வேண்டும். மேலும், தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஆய்வு நடத்திய பின்னர், அதன் புள்ளி விபரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன் பின்னரே அதற்கான சாத்திய கூறுகள் தெரியவரும். கடல் காற்றாலைக்கான கட்டுமானங்கள், தொழில்நுட்பங்களும் இந்தியாவிலேயே கிடைக்கிறது. இந்த திட்டம் மற்ற நாடுகளை விட, ஜெர்மனியில் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தரையில் வாய்ப்புகள் அதிகம்

இந்தியாவில் தரை பகுதியில் தற்போது 18,000 மெகா வாட் அளவிலான காற்றாலை நிறுவுத்திறன் இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 7,000 மெகா வாட் அளவுக்கு உள்ளது. ஆனால், தரை பகுதியில் இன்னும் 1.10 லட்சம் மெகா வாட் அளவுக்கு காற்றாலை அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தயாரிக்க
ரூ.15 கோடி

''தரையில் காற்றாலைகள் அமைப்பதை விட, கடல்பகுதிகளில் காற்றாலைகள் அமைக்க செலவு அதிகம். ஒரு மெகா வாட் உற்பத்தி செய்ய கூடிய காற்றாலை தரைப்பகுதியில் அமைக்க 5 கோடி செலவாகும். இதுவே, கடல் பகுதியில் ஒரு மெகா வாட் மின்உற்பத்தி செய்ய கூடிய காற்றாலைக்கு ரூ.15 கோடி செலவாகும். ஒரு மெகா வாட் என்பது ஒரு மணிநேரத்திற்கு 1,000 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். உற்பத்தி செலவு அதிகரிப்பதால் கட்டணமும் அதிகரிக்கும். கடல் காற்றின் வேகம்  கணக்கீடு செய்து கடல் பகுதிகளில் காற்றாலைகள் அமைக்க குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும்'' என காற்றாலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...