நேர்முகத் தேர்வு இன்று தொடக்கம்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான  நேர்முகத் தேர்வு திங்கள்கிழமை (டிசம்பர் 17) தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு ரேஷன்
கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு திங்கள்கிழமை (டிசம்பர் 17) முதல் 23-ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எட்டையபுரம் சாலையில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெறுகிறது.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பத் தாரர்களின் பதிவு எண்கள் நேர்முகத் தேர்வு தேதி வாரியாக பட்டியலிட்டு மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி துணைப் பதிவாளர் அலுவலகம், துணைப் பதிவாளர் (பொது விநியோக திட்டம்) தூத்துக்குடி,  தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்களின் அறிவிப்பு பலகைகளில் பார்வையிட்டு கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பத் தாரர்களின் வசதிக்காக தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகத்திலும், தூத்துக்குடி 39பி, டி.ஆர்.நாயுடு தெருவிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்திலும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள். 0461-2327151, 0461-2346950. மேற்படி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...