காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னையில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் கல்லூரிகளுக்கும்...
அதேவேளையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களின் ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் திங்கள்கிழமை மாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிகளுக்குச் செல்வதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...