சென்னை பல்கலையின், 2011 மற்றும், 2012ம் ஆண்டுக்கான, 155வது பட்டமளிப்பு விழா, வரும் மார்ச் மாதம் நடக்கிறது. இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பில், பல்கலைக் கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மட்டும், இவ்விழாவில் பட்டங்கள்
அளிக்கப்படுகின்றன. இவர்களோடு, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும், பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பட்டங்கள் பெறுவதற்கு, விண்ணப்பங்களை பல்கலைக் கழகத்தில் நேரடியாகவும், "பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற முகவரிக்கு, 25 ரூபாய் வரைவோலை அனுப்பியும், பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்கள், பிப்., 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இத்தகவல்களை, பல்கலையின் பதிவாளர் (பொறுப்பு) கோடீஸ்வர பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்.