பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர் பதவியேற்பு

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு, மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு, குழுவின் தலைவராக சிங்காரவேலு பதவி ஏற்றது முதல்,
சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, ஒவ்வொரு கட்டமாக, புதிய கட்டணங்களை நிர்ணயித்து வருகிறார்.
இந்நிலையில், குழுவின் நிர்ணயகாலம், கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்ததால், சிங்காரவேலுவின் பதவியும், முடிவுக்கு வந்தது. இந்நிலையில், குழு செயல்பாட்டை நீட்டிப்பு செய்தும், குழுவின் தலைவராக, மீண்டும் சிங்காரவேலுவையே நியமித்தும், தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், கட்டண நிர்ணய குழுவின் தலைவராக, சிங்காரவேலு, நேற்று மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...