பள்ளி அங்கீகாரத்தை புதுப்பித்தல் முகாம்

மதுரையில் ஐந்து மாவட்ட அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பிரிவு பள்ளிகளின் அங்கீகாரங்களை புதுப்பித்தல் முகாம், ஓ.சி.பி.எம்., பள்ளியில் நேற்று துவங்கியது. பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி இதை பார்வையிட்டார். முதன்மை கல்வி அலுவலர்
அமுதவள்ளி முன்னிலை வகித்தார். உதவி பெறும் மற்றும் சுயநிதி பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். இந்தாண்டுக்கான நேரடி ஆய்வுகளை அதிகாரிகள் நடத்தி முடித்துள்ளனர். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கட்டட வசதி, கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வுகள் நடந்தன. இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விண்ணப்பித்திருந்த, உதவி பெறும் மற்றும் சுயநிதி பிரிவு பள்ளிகள் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இன்றைய(ஜன.,23) முகாமில் அங்கீகாரம் புதுப்பித்ததற்கான உத்தரவுகளை, இணை இயக்குனர் வழங்குவார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...