மும்பையில் உள்ள அனைத்து பள்ளி பஸ்களிலும், ரகசிய
கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பஸ்
ஊழியர்களால், மாணவிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக
புகார்கள் வந்துள்ளதை அடுத்து, இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மும்பையில், சமீப காலமாக, பள்ளி பஸ்களில், கண்டக்டர்களால், மாணவிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், பள்ளி பஸ்களில் கண்டக்டர்களாக பணிபுரிந்த இரண்டு பேர், இந்த குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டனர்.இந்த பிரச்னையை தடுக்க, மும்பை போலீசார், அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதுகுறித்து, மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:மும்பையில் உள்ள, அனைத்து பள்ளி பஸ்களிலும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தது, 15 நாட்களுக்கான பதிவுகளை, கேமராக்களில் சேமித்து வைத்திருக்க வேண்டும். தனியார் பஸ்களை, பள்ளிக்காக வாடகைக்கு அமர்த்தினாலும், அந்த பஸ்களிலும் கேமரா வசதி, கட்டாயம் இருக்க வேண்டும். பஸ்களின் பதிவெண், கண்டக்டர், டிரைவரின் பெயர்கள் உள்ளிட்ட விஷயங்கள், சம்பந்தபட்ட பகுதிகளின், போலீஸ் ஸ்டேஷன்களில், முறையாக தெரிவிக்கப்பட வேண்டும்.பள்ளி பஸ்களில், போலீசார், திடீர் சோதனை நடத்தி, டிரைவர் மற்றும் கண்டர்கள், மது குடித்தனரா என்பதை சோதனை செய்வர்.இவ்வாறு மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
புகார்கள் வந்துள்ளதை அடுத்து, இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மும்பையில், சமீப காலமாக, பள்ளி பஸ்களில், கண்டக்டர்களால், மாணவிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், பள்ளி பஸ்களில் கண்டக்டர்களாக பணிபுரிந்த இரண்டு பேர், இந்த குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டனர்.இந்த பிரச்னையை தடுக்க, மும்பை போலீசார், அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதுகுறித்து, மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:மும்பையில் உள்ள, அனைத்து பள்ளி பஸ்களிலும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தது, 15 நாட்களுக்கான பதிவுகளை, கேமராக்களில் சேமித்து வைத்திருக்க வேண்டும். தனியார் பஸ்களை, பள்ளிக்காக வாடகைக்கு அமர்த்தினாலும், அந்த பஸ்களிலும் கேமரா வசதி, கட்டாயம் இருக்க வேண்டும். பஸ்களின் பதிவெண், கண்டக்டர், டிரைவரின் பெயர்கள் உள்ளிட்ட விஷயங்கள், சம்பந்தபட்ட பகுதிகளின், போலீஸ் ஸ்டேஷன்களில், முறையாக தெரிவிக்கப்பட வேண்டும்.பள்ளி பஸ்களில், போலீசார், திடீர் சோதனை நடத்தி, டிரைவர் மற்றும் கண்டர்கள், மது குடித்தனரா என்பதை சோதனை செய்வர்.இவ்வாறு மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.