மத்திய அரசு ஊழியருக்கான டி.ஏ., 80 சதவீதமாக உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, எட்டு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான, அனுமதியை மத்திய அமைச்சரவை
இன்று வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, டி.ஏ., என, அழைக்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இது அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும். கடந்தாண்டு, செப்டம்பரில், அகவிலைப்படி, 72 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது, கடந்த ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தற்போது, ஜனவரி, 1ம் தேதி முதல், அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு, இன்று வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, அகவிலைப்படியை, எட்டு சதவீதம் உயர்த்தி, மொத்தம், 80 சதவீதமாக வழங்க, மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு, இன்று கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். இதன் மூலம், 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர். இதற்கிடையில், அகவிலைப்படி, 50 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை. இதற்காக, ஏழாவது சம்பள கமிஷனை விரைந்து கூட்ட வேண்டும் என, மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் கோரியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...