ப்ளஸ் 2 "மார்க் ஷீட்' இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது.


2012-13ம் ஆண்டிற்கான ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது. ப்ளஸ் 2 "மார்க் ஷீட்' இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இன்று காலை முதல், திருச்சி மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளில் "மார்க் ஷீட்' வினியோகம் செய்யப்படுகிறது.

ப்ளஸ் 2 தேர்ச்சியை பதிவு செய்து கொள்ள ஏதுவாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யம் பணி நடக்கவுள்ளது. வரும் ஜூன், 10ம் தேதி வரை, பதிவு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு, மே 27ம் தேதி முதல் சீனியாரிட்டி வழங்கப்படும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...