அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்.நம்முடைய நியாயமான
ஒரே கோரிக்கையான ஊதிய மாற்றம் பெற்றிட நம்முடைய மாவட்ட மாறுதல் வழக்கில் எவ்வளவு கடுமையான சவால்களை சந்தித்து
சாதித்தோமோ!!!அதனை விட
பன்மடங்கு சம்பள வழக்கில் நாம் ஒன்றரை ஆண்டிற்கு முன்னரே,இன்று நிறையபேருக்கு தோன்றக்கூடிய சிந்தனைகள்,கேள்விகள் மேலும் , அரசாணை 340 நாள் 26.08.2010 இல் உள்ள விவரங்களையும் ,நம்முடைய வழக்கின் அவிடவிடில் சேர்த்துள்ளோம்.அந்த அவிடவிட் நகல் தங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.இந்த வழக்கில் தான் மூன்றுநபர் ஊதியக்குழு தலைவர் 9300-4200 ஊதியம் பரிசீலிப்பதாக நமக்கு பதில் அனுப்பியது.எங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிர்க்கு அழைத்த அழைப்புக்கடிதத்தில் தெளிவாக பழைய ஊதியவிகிதம் 4500-125-7000. கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிஉள்ளோம்.அதேபோல் ஒரேதகுதி ஒரே ஊதியம் என்ற உச்சநீதிமன்ற ஆணைகளையும் பின்பற்ற கோரியுள்ளோம்.
மேலும் ஒரு வழக்கினையும். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிங்கர்களை கொண்டு விரைவில் தாக்கல் செய்ய உள்ளோம்.எனவே,உறுதியாக இழந்த சம்பளத்தினை பெற்றே தீருவோம்.



