இந்திய நீர்வளம்

இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால் இந்திய விவசாயம் பருவக்காற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஆனால் பருவாக்காற்று எதிர்பார்ப்பது போல் அதிக மழையை தருவதில்லை.
* தேவைக்கு அதிகமான மழைப்பொழிவு உண்டாக்கும் போது, வெள்ளம் ஏற்பட்டு, பெருத்த சேதம் ஏற்படுகிறது. மழை பொய்த்துவிடும்போது, வறட்சி உண்டாகி, உணவுப்
பற்றாக்குறையும் நீர்ப் பற்றாக்குறையும் ேற்படுகிறது.
சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவும் ஏற்படுகிறது.
* வேறு சில பகுதிகள் மழையே இல்லாத நிலையில் வறண்டு காணப்படுகிறது. எனவே மழைப்பொழிவு ஏற்படும் இடங்களில் மழைநீரைச் சேமித்து, பிறகு வறண்ட பகுதியில் பயன்படுத்துவதையே நாம் நீர்ப்பாசனம் என்று அழைக்கிறோம்.
* சராசரியாக இந்தியா 118 செமீ மழையளவு பெறுகிறது. எனினும் இது மேகாலயாவின் மெளசின்ராம்(1270 செ.மீ), சிரபுஞ்சி (1110 செமீ) அதிக மழைப்பொழிவிலிருந்து, தார் பாலைவனத்தின் ஆண்டு மழையளவாகிய 10 செமீ வரை வேறுபடுகிறது.
இந்திய காலநிலை
* இந்தியாவின் காலநிலை பல வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. உலகிலேயே மழைமிகு சிரபுஞ்சியும் (1080 செ.மீ), 13 செ.மீ.க்கும் குறைவாக மழை பெறும் தார் பாலைவனமும் இந்தியாவில் தான் உள்ளது.
* இவ்வித வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் காலநிலை அமைப்பு ஓரளவு ஒத்தமைந்துள்ளது. இவ்விதம் காலநிலையைச் சமன்படுத்தும் ஒரே அமைப்பு பருவ காற்று ஆகும்.
* இந்தியாவின் காலநிலையை வேறுபாடுகள் கொண்டதாக ஆக்கும் பண்புகள் மூன்றாகும். அவை: 01. இமயலைகள் 02. கடலிலிருந்து அமைந்த இடைவெளி 03. வேறுபட்ட நிலத்தோற்றம் ஆகியன.
* இமயமலை இந்தியாவின் வட எல்லை முழுவதும் நெடிதுயர்ந்து அமைந்து, இந்தியாவினை ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்கிறது.
* இந்தியாவின் காற்றோட்டம் வெப்பநிலை ஆகியன வெளிப்பாதிப்பு இன்றி அமைகிறது. உதாரணமாக குளிர்காலத்தில் மத்திய ஆசியா, திபெத் ஆகிய பகுதிகளிலிருந்து வீசும் குளிர்காற்று இமயமலைகளால் தடுக்கப்படுவதால், இந்தியச் சமவெளி கடும் குளிரிலிருந்து தடுக்கப்பெறுகிறது.
* இது போன்ற மலை அரண் பெற்றிராமையால் தென் சீனா கடும் குளிரால் பாதிக்கப்படுகிறது. அவ்விதமே கோடையில் பருவக் காற்றினைத் தடுத்து பெரும் மழையைப் பொழிவிக்கிறது.
* இமயமலை இல்லையெனில் வளமிக்க கங்கைச் செவெளி தார் பாலைவனத்தின் தொடர்ச்சியாகவே அமைந்திருக்கும்.
* இந்தியக் கடற்கரை உடைபடாது ஒழுங்காகக அமைந்திருத்தல் ஒரு பெரும் குறைபாடு ஆகும். இதனால் இந்தியாவின் பெரும்பகுதி கடலிலிருந்து வெகுதூரத்தில் அமைந்து வெவ்வேறு பண்புகளைப் பெறுகிறது.
* மிகுந்த வெப்பநிலை, வறட்சி ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. குறுகி அமைந்துள்ள தென்னிந்தியாவிலும், மேற்குத் தொடர்ச்சி மலை, கடற்பண்புகள் உள்நாட்டில் ஊடுருவாது தடுத்துவிடுகின்றன.
* கோடையில் வட இந்தியச் சமவெளி அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும்போது மலைகளில் அமைந்த இமாசலப் பிரதேசம் காஷ்மீர் போன்றவை குளிர்ச்சியாக அமைகின்றன.
* மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குச் சரிவில் பெரும் மழை பொழிவிக்கும் தென்மேற்குப் பருவக்காற்று அமமலைகளுக்குக் கிழக்கிலமைந்த பகுதிகளுக்கு மிகக் குறைந்த மழையை அளிக்கிறது.
* இதனால் தக்காணப் பீடபூமி முழுவதும், மழை மறைவுப் பிரதேசமாக உள்ளது. இதற்கு மாறாக ஆரவல்லி மலைகள் காற்றிற்குக் குறுக்காக அமையாததால் மழையைப் பொழிவிப்பதில்லை. ராஜஸ்தான் பாலைவனமாக உள்ளது.
* இந்தியாவின் காலநிலை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம். அவை: 01. குளிர்காலம் (டிசம்பர் - பிப்ரவரி) 02. கோடை காலம் (மார்ச் - மே) 03. தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் (ஜூன் - செப்டம்பர்) 04. பருவக் காற்று பின்வாங்கும் காலம் (அக்டோபர் - நவம்பர்)
குளிர்காலம்
* டிசம்பர் முற்பகுதியில் தொடங்கி பிப்ரவரி முடிய குளிர்காலமாகும். பொதுவாக இப்பருவத்தில் வானம் தெளிந்து அமையும், வறண்டும் அமையும்.
* இரவு வெப்பநிலைகள் வட இந்தியாவில் இரவு வெப்பநிலைகள் மிகத் தாழ்ந்தும், பகல் வெம்மையாகவும் அமையும். இக்காலத்தில் தான் இந்தியாவின் இரு சிறு பாகங்களில் மழை பொழிகிறது.
* வட இந்தியாவில் இமயத்தின் அடிவாரத்தை ஒட்டி மேற்கிலிருந்து வரும் மத்தியத் தரைக்கடல் புயல்களால் மழை ஏற்படுகிறது.
* அலகாபாத் வரை இம்மழைப் பொழிவு காணப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் குளிர்காலத்தில் தான் உச்சமழையைப் பெறுகிறது. இம்மழை கோதுமை சாகுபடிக்கு மிக உதவியாய் இருப்பதால், இதனைக் கோதுமை மழை எனவும் கூறுவர்.
* மழை பெறும் மற்றொரு பகுதி தமிழ்நாட்டின் தென்கோடியாகும். வட இந்தியாவிலிருந்து வீசும் வறண்ட காற்று திசைமாற்றம் அடைகிறது. இது வங்கக் கடல் மீது வீசும்போது நீராவியை ஏற்று தென்கோடிக்கு மழை தரும் காற்றாக அமைகிறது.
கோடை காலம்
* மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி சூரியன் வட அரைக்கோளத்தில் அமைகிறது. எனவே, சூரியனின் செங்குத்துக் கதிர்களால் இந்தியாவின் வெப்பநிலை உயருகிறது.
* இவ்வுயர்வு தெற்கில் தொடங்கி படிப்படியாக வடக்கு நோக்கி நகர்கிறது. மே மாதத்தில் வட சமவெளிகளில் வெப்பநிலை வெகுவாக அதிகரிக்கிறது. இதன் விளைவாக தார் பாலைவனப் பகுதி தொடங்கி, சோட்டா நாகபுரி பீடபூமி வரை ஒரு குறை அழுத்தப் பள்ளம் பரவி அமைகிறது.
* இக்குறை அழுத்தத்தைச் சார்ந்து ஆங்காங்கே தீவிர தல கதாற்றோட்டங்கள் ஏற்படுகின்றன. இப்பருவத்தில் ஏற்படும் இடி புயலால் பெரும் மழைப்பொழிவு ஏற்படுகிறது.
* லூ என்னும் வறட்சிமிக்க காற்றும் இப்பருவத்தில் வடமேற்கு இந்தியாவில் வீசுகிறது. தெற்கில் கேரள, கர்நாடக கடற்கரைப் பகுதிகளை ஒட்டி இட்ப்புயல் மழை ஏற்படுகிறது. காப்பிச் செடி துளிர் விட இது மிகப் பயன்படுவதால், இதனை துளிர் மழை என்பர்.
* வங்காளத்தில் இப்பருவத்தில் வடமேற்கிலிலருந்து வீசும் வறண்ட காற்றும், வங்கக் கடலிலிருந்து வீசும் ஈரக்காற்றும் சந்திப்பதால் பெருமழை ஏற்படுகிறது. இதனை நார்வெஸ்டர் மழை என்பர். இதைத் தவிர பிற பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.
தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம்
* சூரியன் வடக்கில் நகர நகர வெப்பநிலை உயருகிறது. ஜூன் இருதியில் சூரியின் வட அயனக்கோட்டில் அமையும்போது உச்ச வெப்பநிலை ஏற்படுகிறது.
* சூரியனைத் தொடர்ந்து குறை அழுத்தப் பகுதியும் நகர்ந்து இந்தியாவின் வடமேற்கில் நிலை கொள்கிறது. பின்னர் தீவிரமைடகிறது. அப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து வீசும் தென்கிழக்கு வியாபாரக் காற்று புவி நடுக்கோட்டுப் பகுதியுடன் நின்று விடாது அதனைக் கடந்து வடக்கில் வீசுகிறது.
* அப்போது வலப்பக்கம் திசை மாற்றமடைந்து தென்மேற்குப் பருவக் காற்றாக இந்தியாவில் வீசுகிறது நீண்டதூரம் வெப்பமிகு கடற்பகுதியின் மீது வந்தமையால் இக்காற்று நீராவி மிகுந்த ஈரக் காற்றாக உள்ளது.
* இந்தியாவை அடையும் இக்காற்று அரபிக்கடல் பிரிவு, வங்கக் கடல் பிரிவு என இரண்டாகப் பிரிகிறது. அரபிக் கடல் கடல் பிரிவு மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் செங்குத்தாக வீசுவதால் தடுக்கப்பட்டு மேலெழுகிறது. எனவே பெரும் மழையை மேற்குச் சரிவுகளில் பொழிவிக்கிறது. மழையளவு தெற்கில் திருவனந்தபுரத்திலிருந்து சிறிது தசிறிதாக அதிகரித்து மங்களூருக்கருகில் உச்ச அளவாக அமைகிறது.
* வங்க கடல் கிளை பர்மாவின் அரக்கன்யோமா மலைகளால் தடுக்கப்படுகிறது. இதனால் பர்மாவின் மேற்குக் கடற்கரை மிகுதியான மழையைப் பெருகிறது. பின்னர் இக்காற்று இந்தியா நோக்கித் திசை திருப்பப்பட்டு கங்கைச் சமவெளியை அடைகிறது.
* இங்கு இது இமயத்திற்கு இணையாக வடமேற்குத் திசையில் முன்னேறுகிறது. இதனால் கங்கைச் சமவெளி முழுவதும் பரவலாக மழை பெறுகிறது.
* இக்காற்று வடமேற்கிலுள்ள தாழ் அழுத்த மையத்தை அடைகிறது. ஜூன் துவக்கத்தில் இந்தியாவின் தென்கோடியை வந்தடையும் தென்மேற்குப் பருவக்காற்று ஜூலை மாத துவக்கத்தில் இந்தியா முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருகிறது.
* வங்க்க கடல் பிரிவினால் வட இந்தியாவின் பெரும்பகுதி மழை பெறுகிறது. தாழ் அழுத்த மையம் அமைந்துள்ள போதிலும் ராஜஸ்தான் மிக்க குறைந்த மழையையே பெறுகிறது.
* மேகாலாயாவில் அமைந்துள்ள சிரபுஞ்சி மற்றும் மெளசின் ராம் ஆகியவை உலகிலேயே மழை மிகுந்த பகுதிகளாகக் கருதப்படுகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...