தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை

கேள்வி:–தமிழ்நாட்டில் மாணவர் வருகை குறைவு எனக்கூறி, ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவும், ஓராசிரியர் பள்ளிகளை அறவே மூடிவிடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறதே?

பதில்:–இதுபற்றி அரசாணை வெளியிட்டால் பெரிய எதிர்ப்பு வரும் என்பதால், அவ்வாறு ஆணையாக வெளியிடாமல் வாய்மொழி உத்தரவின் மூலமாக அரசு செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்தப்பள்ளிகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே அரசு இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொண்டு, மாணவர்களின் வருகையை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்று கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...