ரயி்ல்வேயின் புதிய திட்டம்

புதுடில்லி: ரயி்ல்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், பயணிகள் எளிதாக டிக்கட்டுகளை புக் செய்ய வசதியாக, இ-வாலட் என்ற புதிய திட்டத்தை
அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது, ஆன் லைனில் டிக்கட் பதிவு செய்யும் போது, கிரெடிட், டெபிட் கார்டுகளையோ, நெட்பேங்கிங் முறையிலோ பணம் செலுத்தப்படுகிறது. இதனால், டிக்கட் பெறுவதில் பல்வேறு சிக்கல்களும், தாமதமும் ஏற்படுகின்றன. இ-வாலட் முறையில், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே, ஐ.ஆர்.சி.டி.சி., கார்ப்பரேஷனில் பணத்தை டெபாசிட் செய்து வைக்கலாம். டிக்கட் எடுக்கும் போது, மிகவும் எளிதாக பணம் செலுத்த முடியும். அதன் மூலம், காலதாமதமில்லாமல் டிக்கட்டுகளை பெறவும் முடியும் என்று அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிததுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...