பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள் பல்வேறு
தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். இது குறித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்
சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் மூன்றில் ஒரு பங்கு
குழந்தைகள் இரவு
11.30 மணிக்கு பிறகே படுக்கைக்கு செல்கிறார்கள். இதனால் மறுநாள்
பள்ளிக்கூடத்தில் கவனம் இன்றியும், தூக்க கலக்கம் ஏற்பட்டும்
அவதிப்படுகிறார்கள். இந்த குறையை போக்க இரவு சற்று சீக்கிரமாகவே தூங்க
கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.அது மட்டுமின்றி இரவில் தூக்கம் இன்றி அதிகநேரம் கண் விழித்து இருந்தோமேயானால் அது உடல்நலத்திற்கும் தீங்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என வாஷிங்டனை சேர்ந்த மருத்துவ வல்லுனர் ஜூடித் உவென்ஸ் எச்சரிக்கிறார்.