CFL பல்ப் எச்சரிக்கை

சி. எஃப் . எல். பல்புகள்
கைத்தவறி விழுந்து
உடைந்துவிட்டால் , உடனே அந்த
இடத்தை விட்டு வெளியேறிவிட
வேண்டும் என்று பிரிட்டிஷ்
சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .
ஏனென்றால் இந்த பல்புகளுக்குள்


உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் ,
துத்தநாகத்தைவிட அதிக
விஷத்தன்மையுள்ளது . இந்த
விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில்
பட்டாலோ , மைக்ரேன் தலைவலி ,
மூளை பாதிப்பு ,
உடல்அசைவுகள் ,
பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல்
போன்றவை ஏற்படுமாம் .

அலர்ஜி
பிரச்னை உள்ளவர்களுக்கு சரும
பாதிப்புகளும் ஏற்படுமாம் . சி .
எஃப் . எல் . பல்புகள் உடைந்துவிட்டால்
என்ன செய்ய வேண்டும் ? *

உடனே அந்த
அறையிலிருந்து வெளியேறி விட
வேண்டும் . அந்த நெடி மூக்கில்
ஏறக்கூடாது .
பதினைந்து நிமிடங்கள் ஆனபின்
அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக்
கிடக்கும் கண்ணாடித் துகள்கள்
காலில் படாமல் பார்த்துக்
கொள்ளவும் . * வேக்வம் க்ளீனரால்
சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம்
உறிஞ்சப்பட்டால் ,
அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் .
அதைத் திரும்ப உபயோகிக்கும்
போது மெர்க்குரித் துகள்கள் மற்ற
அறைகளுக்கும் பரவி , மிக
மோசமான உடல்
உபாதைகளை ஏற்படுத்தும் . *
கைகளில்
ரப்பர் கிளவுஸ்
போட்டுக்கொண்டு சாதாரண
துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் . *
உடைந்தத் துகள்கள் மற்றும்
திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில்
சேகரித்து , ' சீல் ' செய்யவும் .
சாதாரண குப்பைத் தொட்டியில்
போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங்
பின் ' னில் கொண்டு சேர்த்தால் ,
அவர்கள் பாதுகாப்பாக
அப்புறப்படுத்தி விடுவார்கள் .
முடிந்த வரையில் நண்பர்கள்
அனைவரும் இந்த பதிவை
அனைவருக்கும் பகிரவும் !

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...