12 ஆயிரம் ஆசிரியர் "ஆப்சென்ட்": பாய்கிறது நடவடிக்கை

தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும் கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்" முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2 நாளுக்கும், சம்பளம், நிறுத்தம் செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...